Monday, February 8, 2010

அநன்யா மஹாதேவன் தம்பதிகளுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்

இன்று திருமணநாள் கொண்டாடும் அநன்யா மஹாதேவன்
இருவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.




அநன்யாவின் வலைப்பூ இங்கே.


அநன்யாவுக்கு பிடித்த கமலஹாசன் அவர்களின்
பாடல்கள்.









Friday, January 22, 2010

நிஜமா நல்லவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று நிஜம்ஸ் தம்பியின் பிறந்த நாள்.

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்
பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்
ஹேப்பி பர்த்டே டூ யூ.

Tuesday, January 5, 2010

HAPPY BIRTHDAY AYILYAN BOSS





இன்று பிறந்தநாள் கொண்டாடும் சின்னபாண்டி என
அன்போடு அழைக்கப்படும் ஆயில்யன் பாஸ் அவர்களுக்கு
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

எல்லா இடங்களிலும் ராசியாக இருப்பவர் இந்த கடகம்
வலைப்பூக்காரர்.




பெட்ரோமாக்ஸ் லைட் எனும் இந்தப் பதிவு எனக்கு ரொம்ப
பிடிக்கும்.


எட்டில் வாழ்க்கை எனும் இந்தப் பதிவு படிச்சிருக்கீங்களா??

1.முழு முதலாய் மூச்சு

மூச்சு காற்றினை இழுத்து விடும் இயல்பிலேயே மிக கவனம் வைத்து அதிகம் அவசரமின்றி,அவதியின்றி மிகப்பொறுமையாக காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். உடலே ஆதாரம் அதற்கு முக்கியமான செயல் மூச்சுக்காற்றினை முறையாக உள்ளிழுத்து வெளிவிடுதலே! அவசரகதியில் இயங்கவேண்டாமே!

2.இயற்கையோடு இயைந்த வாழ்வு

இயற்கை பெரும்பாலும் வெட்டவெளியிலே விரிந்து பரந்து கிடக்கிறது. இயல்பான நடைப்பயிற்சி,கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,மனதில் எந்தவொரு நிகழ்காலபிரச்சனைகளின் பாதிப்பினையும் ஏற்றிக்கொள்ளாமல் இயற்கையினை கவனியுங்கள். - நடைப்பயின்றும்,இல்லையேல் அமர்ந்துக்கொண்டும்!

3.உறவுகளோடும் நட்புக்களோடும்.

கடந்த வாழ்க்கையில் நம்மை கடந்து சென்றவர்கள் தொடர்ந்து வருபவர்கள் என நமக்கு பிடித்தவர்களினை பற்றிய குறிப்பினை வைத்துக்கொள்ளுங்கள்! நேரம் அமைத்துக்கொண்டு மனம் மகிழ அவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்!

4.சின்ன சின்ன விசயங்கள்

சின்ன சின்ன விசயங்களில் முழுமையாய் ஈடுபாடு கொண்டு ரசித்து செய்யுங்கள் எந்தவொரு சின்ன செயலினையும்!

5.இசையாக வாழ்வு

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!

6.படைப்புக்களில் பயணம்

ஓவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான வகையில்,ஒவியம்,கலை,எழுத்து போன்ற துறை படைப்புக்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!

8.பொதுவாழ்வில் ஈடுபாடு

சிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்!


டிஸ்கி:- டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை பதிப்பில் வெளியான கட்டுரையின் சாரம்சம் - தமிழில்...!

* ஆயில்யன்

Monday, January 4, 2010

RECESSIONல் மாட்டிய ஒரு தெலுங்கு பிரம்மச்சாரியின் நிலை!!!!!

எந்த ஒரு அம்மாவுக்கும் வயது வந்த மகனுக்கு ஒரு
கால்கட்டு போட்டு, மாலையும் கழுத்துமாக பார்க்கும்
ஆசை உண்டு. ஆனா இப்ப இந்த ரெஷஷ்ன் வந்து
அந்த ஆசைக்கும் ஆப்பு வெக்குது.

பாவம் அம்மா கோவை சரளா தன் மகனைக் கல்யாணம்
செஞ்சுக்க சொல்லிக்கேட்க அந்த ரவணம்மாவின் மகன்
தான் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கும் இந்த
பாடல் இப்போ சூப்பர் ஹிட்.

பம்பர் ஆஃபர் எனும் தெலுங்கு படத்தின் பாட்டு இது.
நோ தெலுகுன்னு சொல்றவங்க பாட்டின் அர்த்தம்
புரிஞ்சுக்க தமிழில் விளக்கமும் கொடுக்கறேன்.

ஆபீஸ்ல இப்ப இருந்தாலும் வீட்டுக்குபோயாவது
இந்த வீடியோவை பாத்திடுங்க. கோவை சரளா
டான்ஸ் சூப்பர். :)))



மஹாராணி ஸ்ரீ ரவணம்மாவுக்கு அவரது மகன்
சொல்லிக்கொள்வது என்னவென்றால் ரெஷஷனில்
பலருக்கு வேலை போய்விட்டது.
ரியல் எஸ்டேட் ஃபீல்ட் நொடிச்சு போச்சு,
சாஃப்டெ வேர் ஃபீல்ட் அடி வாங்கியிடுச்சு.

இதெல்லாம் பெரிய மனது செஞ்சு நீங்க புரிஞ்சுகிட்டு
என் கல்யாணத்தை நிறுத்தணும்.

அமெரிக்காவுலேர்ந்து நம்மாளுங்க எல்லாம்
பொட்டியை கட்டி திரும்ப வந்துகிட்டு இருக்காங்களாம்.
கட்ட பணம் இல்லாம காரை துபாய் ஏர்போர்டுலேயே
விட்டுட்டு வந்திடறாங்க.
உன் புருஷன் குமாஸ்தா, நானோ உபயோகமில்லாதவன்
இந்த நிலையில் கல்யாணம் செஞ்சுக்கத்தான் வேணுமா??

தான் நுழையவே சந்தில்லை. இதில் கழுத்துக்கு டோல்
தேவையா?

இப்படி இளைஞனின் இன்றைய நிலையைச் சொல்லும்
பாடல். வார்த்தைகள் புரியும். கொஞ்சம் கவனிச்சு
கேட்டுப்பாருங்க.

:))))

Sunday, December 6, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜீவ்ஸ்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி
ஜீவ்ஸ் வாழ்வில் எல்லா வளமும் பெற்று
பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனைப்
பிராத்திக்கிறேன்.



உங்கள் மருமக்கள் அனுப்பிய கேக் ஜீவ்ஸ் :))



இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
கலா, ஸ்ரீராம், ஆஷிஷ், அம்ருதா

Wednesday, July 22, 2009

ஏமாற்றத்தை தந்த சூரிய கிரஹணம் :((

நீண்ட சூரிய கிரஹணத்தை பாத்திடலாம்னு
அதுக்கான ஷ்பெஷல் கண்ணாடி எல்லாம் வாங்கி
ரெடியா வெச்சிருந்தோம்.


இன்னைக்கு எங்களூக்கு பள்ளி விடுமுறை என்பதால்
நல்லா எஞ்சாய் செஞ்சு பாக்கலாம்னு நினைச்சோம்.

ப்ச்...

காலையில் 6 மணிக்கே எழுந்து கண்ணாடியை
எடுத்துக்கொண்டு பால்கனிக்கு போனோம்.


அங்கே மேகமூட்டமான வானத்தைதான் பாத்தோம்!!!
நேற்று இரவு மழை பெய்தது.. அதே வானிலை
இன்னைக்கும் தொடர்வதால் ஒரே மேக மூட்டம்.


சரின்னு டீவியைப்போட்டு பாத்தா
குருஷேத்ரா, வாரனாசி, டெல்லி ஆகிய
இடங்களில் எடுத்த படங்களைக் காட்டினாங்க.

நம்ம ஊரு சேனல்ல என்ன சொல்றாங்கன்னு
பாப்போம்னு டீவி9 சேனலை போட்ட
ஹைதராபாத்தில் இருக்கும் பிர்லா
கோளரங்கத்து அதிகாரி ஒருவர் பேட்டிக்கொடுத்து
கிட்டு இருந்தார்.

”ஹைதராபாத்தில் முழு சூரிய கிரஹணம்
தெரிய வாய்ப்பில்லை. இது தெரியாமல்
பல மக்கள் வந்து ஏமாற்றத்துடன்
திரும்பிச் செல்கிறார்கள். Partial elcipse
தான் இங்கே பார்க்க முடியும். அது
இன்னும் 2 வருடங்களில் வரலாம்”
என்று சொன்னார்.


ம்ம்ம். அடுத்த முழு சூரியகிரஹணம்
105 வருடம் கழித்து தான் வருமாம்.

Wednesday, July 8, 2009

:))))))))))))))))))))))

நேற்று இரவு மணி 9..

”அங்க மணி எவ்வளவு அப்பா?” கிட்ட கேட்டோம்.

மணி 11.45 அப்படின்னு அப்பா சொல்ல,
ஆஹா இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு,
முழிச்சிருந்து நம்ம திட்டத்தை செயல் படுத்தணும்னு
நாங்க இரண்டுபேரும் முடிவு செஞ்சோம். :)))

கரெக்டா மணி 9.15 உடனே போன் எடுத்து
அந்த நம்பரை டயல் செஞ்சோம்.

ட்ரிங்..ட்ரிங்க்..ட்ரிங்க்.

ம்ம்ஹூம் எடுக்கலை. மிட் நைட் ஆச்சே!!
இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் செய்யலாம்னு செஞ்சோம்.

போன் எடுத்தாச்சு...” குட் மார்னிங், ஹேப்பி பர்த்டே டு யூ”
அப்படின்னு பாடினோம்.

யெஸ், இன்னைகு எங்க கார்த்தி மாமாவுக்கு பர்த்டே.
மிட் நைட்ல தூக்கத்தை கெடுத்து விஷஷ் சொல்லிட்டோம்.
ஆனாலும் இங்கே ஒரு பதிவு.



வீ லவ் யூ சோ மச் மாமா.

ஹாப்பி பர்த்டே!!!!!!



***************************
டிஸ்கி: எங்க பர்த்டேவுக்கு விடிய காலையில் 5 மணிக்கு
போன் போட்டு எங்க தூக்கத்தை கெடுத்ததால மாமாவுக்கு
ராத்திர் 12 மணிக்கு போன் போட்டு விஷஷ் சொன்னோம்.
:)))))))))))))))))). மாமா இருப்பது சிங்கையில்.