Monday, June 29, 2009

நாங்க செஞ்சது.

எங்களுக்கு லீவு விட்டிருந்த போது நடந்தது இது.
எங்களூக்கு ரொம்ப பிடிக்கும்னு அம்மா
சன்னா செஞ்சு வெச்சிருந்தாங்க. இரவு டிபனுக்கு
சூடா பூரி இல்லாட்டி சப்பாத்தி செஞ்சு சன்னாவை
சூடு செஞ்சிட்டா டின்னர் ரெடின்னு அம்மா
ப்ளான் போட்டு வெச்சிருந்தாங்க.

அன்னைக்கு அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம
போயிடிச்சு. பயங்கர தலைவலி அம்மாவுக்கு.
”ராத்திரி சாப்பாடு வெளியிலேர்ந்து கொண்டு
வரலாம்னு அப்பா சொன்னாங்க”.

அம்மா செஞ்சு வெச்சிருக்கற சன்னாவை விட
மனசில்லை. :))))

அப்பாவை மாவு பிசைஞ்சு கொடுத்து சொல்லி
பக்கத்துலே நிக்கச் சொன்னோம்.

அம்ருதா பூரி ஒத்திகொடுக்க...



நான் அதை எண்ணையில் போட்டு எடுத்தேன்.
அப்பா தான் செய்வதா சொல்லியும் நாங்க
விடலை. அம்மாதான் எங்களுக்கு சொல்லிக்
கொடுத்திருக்காங்களே!!



இரவு சுடச்சுட பூரி + சன்னா ரெடியாகிடிச்சு.
அம்மா செய்வது போல அப்பா வட்ட வட்டமா
வெங்காயத்தை வெட்டி தட்டில வெச்சு அமர்க்களமா
டேபிள் செட் செஞ்சாங்க.


இதுவரைக்கும் தோசை & காபி எக்ஸபர்டா இருந்த
நான் பூரி எக்ஸ்பர்டாகவும், சப்பாத்தி எக்ஸ்பர்டா
இருந்த அம்ருதா பூரி மாஸ்டராகவும்
மாறிட்டோமே.

அம்மா, அப்பா ரெண்டுபேரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.
அம்மா,அப்பாவுக்கு உதவியதுல எங்களுக்கும்
சந்தோஷம்.

ஆஷிஷ்

வணக்கம், வந்தனம்....

அங்கிள்ஸ் & ஆண்டீஸ்,

எல்லோருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

எல்லோரும் நலமா??? நாங்க நல்லா இருக்கோம்.

இங்க வந்ததுக்கப்புறம் கொஞ்சம் பிசியாகிட்டோம்.
அதனால் தொடர்ந்து எழுதலை.




கத்துகிட்ட தமிழை மறந்திடக்கூடாது, அதனால்
பதிவு எழுதுங்கன்னு அம்மா கண்டிப்பா சொல்லிட்டாங்க.

இனி இந்த ப்ளாக்ல நானும் அண்ணாவும் நிறைய்ய
எழுதுவோம்.

இதைத் தவிர எங்களோட இன்னொரு ப்ளாக்லயும்
எழுதுவோம். அங்கயும் கண்டிப்பா வாங்க.

அண்ணாது

என்னோடது


சி யூ ஸூன்.

அன்புடன்
அம்ருதா