Tuesday, January 5, 2010

HAPPY BIRTHDAY AYILYAN BOSS





இன்று பிறந்தநாள் கொண்டாடும் சின்னபாண்டி என
அன்போடு அழைக்கப்படும் ஆயில்யன் பாஸ் அவர்களுக்கு
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

எல்லா இடங்களிலும் ராசியாக இருப்பவர் இந்த கடகம்
வலைப்பூக்காரர்.




பெட்ரோமாக்ஸ் லைட் எனும் இந்தப் பதிவு எனக்கு ரொம்ப
பிடிக்கும்.


எட்டில் வாழ்க்கை எனும் இந்தப் பதிவு படிச்சிருக்கீங்களா??

1.முழு முதலாய் மூச்சு

மூச்சு காற்றினை இழுத்து விடும் இயல்பிலேயே மிக கவனம் வைத்து அதிகம் அவசரமின்றி,அவதியின்றி மிகப்பொறுமையாக காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். உடலே ஆதாரம் அதற்கு முக்கியமான செயல் மூச்சுக்காற்றினை முறையாக உள்ளிழுத்து வெளிவிடுதலே! அவசரகதியில் இயங்கவேண்டாமே!

2.இயற்கையோடு இயைந்த வாழ்வு

இயற்கை பெரும்பாலும் வெட்டவெளியிலே விரிந்து பரந்து கிடக்கிறது. இயல்பான நடைப்பயிற்சி,கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,மனதில் எந்தவொரு நிகழ்காலபிரச்சனைகளின் பாதிப்பினையும் ஏற்றிக்கொள்ளாமல் இயற்கையினை கவனியுங்கள். - நடைப்பயின்றும்,இல்லையேல் அமர்ந்துக்கொண்டும்!

3.உறவுகளோடும் நட்புக்களோடும்.

கடந்த வாழ்க்கையில் நம்மை கடந்து சென்றவர்கள் தொடர்ந்து வருபவர்கள் என நமக்கு பிடித்தவர்களினை பற்றிய குறிப்பினை வைத்துக்கொள்ளுங்கள்! நேரம் அமைத்துக்கொண்டு மனம் மகிழ அவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்!

4.சின்ன சின்ன விசயங்கள்

சின்ன சின்ன விசயங்களில் முழுமையாய் ஈடுபாடு கொண்டு ரசித்து செய்யுங்கள் எந்தவொரு சின்ன செயலினையும்!

5.இசையாக வாழ்வு

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!

6.படைப்புக்களில் பயணம்

ஓவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான வகையில்,ஒவியம்,கலை,எழுத்து போன்ற துறை படைப்புக்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!

8.பொதுவாழ்வில் ஈடுபாடு

சிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்!


டிஸ்கி:- டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை பதிப்பில் வெளியான கட்டுரையின் சாரம்சம் - தமிழில்...!

* ஆயில்யன்

10 comments:

வந்தியத்தேவன் said...

சின்னப்பாண்டி ஆயில்ஸ்சுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Ungalranga said...

ஆயில்ஸண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!

ஹாப்பி பர்த்டே..!!

ராமலக்ஷ்மி said...

அவரது அருமையான படைப்புகள் பகிர்வுகளுடனான இந்த வாழ்த்து வெகு அருமை தென்றல். இங்கேயும் சொல்லிக் கொள்கிறேன் ஆயில்யனுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை!

குசும்பன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ்!

Iyappan Krishnan said...

ஆயில்யன் என்றதோர் அற்புத நண்பர்தான்
சேயினை யொத்த அவர்மனம் என்சொல்ல
வாயிலா பூச்சிதா னென்றவரைச் சொன்னாலும்
கோயிலின் தீபம் அவர்.

பிறந்த நாள் வாழ்த்துகள் ஆயில்யன்!!

Pandian R said...

சி.பா தலைவருக்கு வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

@ வந்தி

@ ரங்கன்


@ ராமலெஷ்மியக்கா

@ குசும்பன்

@ ஜீவ்ஸ்ண்ணாச்சி

@ fundoo ( இது யாரு?!)

உங்களின் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளுடன்...

அன்புடன்
ஆயில்யன்

ஆயில்யன் said...

ஆஷிஷ் - அம்ருதா - ஸ்பெஷல் நன்றிகள் - பாஸுக்கும் நன்றிகள் :)

pudugaithendral said...

@ fundoo ( இது யாரு?!)


நம்ம புதுகைக்காரர் பாஸ்.

pudugaithendral said...

சந்தோஷம் பாஸ்